Monday 29 February 2016

ஒரு புளிய மரத்தின் கதை : என் பெயர் '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' @ 'புளிய மரம்'

கடைசியில் அது நடந்தே விட்டது. 

போன வாரம் தான் இதேபோல பேருந்திலும் ஒரு முறை நடந்தது. பேருந்தில் இப்படி நடப்பது இது முதல் முறையும் அல்ல. அது ஓரளவு க்கு புரிந்து கொள்ளக் கூடியதே. 

ஆனால் அதற்காக அதே போல ஓட்டலிலும் நடப்பது என்பது கொஞ்சம் ஜீரணிக்க முடியாததாக உள்ளது. 

நானும் அதை தவிர்க்க எவ்வளவோ முயன்ற பின்பும் அது அந்த சப்ளயரின் பிடிவாதத்தால் நிகழ்ந்து விட்டது. 

நானும் எத்தனை முறை சென்று கேட்டிருப்பேன் அப்போதெல்லாம் சிரித்துக் கொண்டே "உட்காருங்க சார்" என்று விட்டு,  "தயார் ஆனதும் சொல்றேன் சார்" என்றவர் இப்ப எல்லோர் முன்னாடியும்

 " '1பொடி, 3 ரவா, 2 ஊத்தப்பம், 1 தக்காளி ரைஸ்' வாங்க" என்கிறார் நீட்டி முழக்கி. இப்போ போய் கைல அந்த பார்சல வாங்குறாதா இல்லயா. 

இல்ல "மாப்ஸ் நீ வாங்கிட்டு இங்க வெயிட் பண்ணு நான் போய் வண்டிக்கு பெட்ரோல் போட்டு வர்ரேன்"னு போனவன் வரட்டும்னு அவன்தான கேட்டான் அந்த தக்காளியனு வெயிட் பன்னலாமா?

அது சரி, பஸ்ஸுல என்ன ஆச்சுன்னு இப்ப தெரிஞ்சாகனும் அதான? 

"சார் புதுசா வர்ரேன் ஸ்டாப் வந்தா சொல்லுங்க"ன்னு சொன்னதுக்கு அந்த கண்டக்டர் சொன்னது....

"புளிய மரம்லாம் எறங்குங்க"

வேற வழி?,  இறங்கிட்டேன்.

No comments:

Post a Comment