Thursday 4 April 2013

கட்டாததை எப்படி அவிழ்ப்பது? (அ) மதுரைலேர்ந்து எப்ப வந்த?

திரு. K. G. ஜவர்லால் அவர்களது இந்த பகிர்வை இப்போதுதான் படித்தேன்.

நல்ல பகிர்வு.

கீழே உள்ளது தெளிவாக புரிய வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ஒருமுறை அங்கு சென்று படித்துவிட்டு வந்துவிடவும். இல்லை போத்திக்கிட்டும் படுத்துக்கலாம் அப்படிங்கறவங்க அப்படியே தொடரலாம்.

 இந்த பதிவைப் படித்தபின் எனது கல்லூரி கால நினைவொன்று மீண்டது.
தேனி என்றழைக்கப்படும் நண்பன் வெங்கடேசனிடம், ஒரு திங்கள் கிழமை காலையில் அதி முக்கியமாக நான் கேட்ட  கேள்வி

"டேய் மாப்பு, எப்படா மதுரைலேர்ந்து வந்த?"

வெங்கடேசன் : "லேய், நான் போகலடா".

நான் : "டேய்....கலக்குற....எப்புட்றா போகாமயே மதுரைலேர்ந்து வந்த?#&*!?"

வெங்கடேசன் : "லேய், @#$%^&*()!?<>)(*&^%$#@!:"}{[]||"  (ரொம்ப நக்கலும் எகத்தாளமும் தொனிக்க ஒரு உவமானம் / டயலாக் வாங்கிக் கட்டிக்கொண்டேன்).

பி. கு : அந்த வெங்கடேசன் தற்போது தேனி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுகிறா(ர்)ன்.

போத்திக்கிட்டு படுத்துக்கிரவங்களுக்காக :-
தொடர்புடைய இடுகை : கட்டாததை எப்படி அவிழ்ப்பது?

Sunday 3 February 2013

தேடலும் பயணமும் கவிதையும்

All the travel & Search
தேடலும் பயணமும் கவிதையும்

எல்லா தேடல்களையும் பயணமாகவும்
எல்லா பயணங்ளையும் தேடலாகவும் கொள்வது
கவித்துவமாக எளிதாக உள்ளது.