Wednesday 15 August 2012

ஆழம்



ஆழமா? உயரமா?


எதன் ஆழம் காட்டுதிந்த அளவை
தண்ணீரின் அடி ஆழமா?
மேலிருக்கும் வெளி ஆழமா?
காண்பவர் கண் ஆழமா?

கரையில் நின்றபடி வியந்திருந்த என்னிடம்

இவை ஏதுமில்லை,
உன் உள்மன பயத்தின் உயரம் காட்டுதென்றே
சொல்லிச்சென்றான் ஒரு பரிசல்காரன்

No comments:

Post a Comment