Wednesday 3 February 2016

ஜல்லிக்கட்டு : தடை ஏன்?

ஜல்லிக்கட்டு என்ற பெயர் வடமொழி எழுத்து கொண்டு தொடங்குவதால் இது தமிழர் விளையாட்டு அல்ல என்று அறிய வருகிறது. இதனை அப்படியே தமிழ்ப்படுத்தினால் சல்லிக்கட்டு என்று வருகிறது. தமிழன் அத்துனை சல்லித்தனமானவனா என்ன????

அதன் மொழியாக்கப் பெயர்களான ஏறு தழுவுதல் காளை பிடித்தல் போன்றன வடவர் சூழ்ச்சி என்றே அறிக. அந்த விளையாட்டினை நன்றாக பார்த்தால் அவ்வளவு பெரிய மாட்டினை எப்படி தழுவ முடியும் என்ற அடிப்படை கூட இல்லையே....இந்த அழகில் அதன் மேலேறி நிற்க வேறு வேண்டுமாம்.....கேழ்வரகில் நெய் வடிகிறதே என்றால் கேட்பார் மதி இன்றியா போய் விடும்???!!!

இதன் பதிலீடாக அம்மானை அல்லது பல்லாங்குழி முதலான தமிழர் விளையாட்டுகளை பழக வேண்டும்.

அம்மானை விளையாட்டானது தமிழின் முதலான அகரம் கொண்டு தொடங்குதல் சிறப்பு. அம்மா அணை என அன்பும் அம் மானை என காளையர்க்கு காதலும் உணர்த்துவதை காணலாம். - அம்மா ஆனை என பிழை புரிதல் கெடுதலாம் அறிக. மேலும் ஏறு தழுவி மாட்டுடன் போட்டியிடல் தகுதிக்குறைவாம் காண்க. ஆனையுடன் பொருதல் அன்றோ சிறப்பு?


பல்லாங்குழி ஏன் சிறப்பு..... அம்மானை விளையாட யானை எங்கு கிட்டும்.....😂😂
பல குழி வெட்டி அல்லவா யானை பிடிக்க வேண்டும்.....????!!!!! அதற்குத்தான்.
மேலும் இதனை ஒருசில பத்தாண்டுகள் பழகிய பின் தமிழரின் (அடுத்தவருக்கு) குழி வெட்டு திறன் மிகும். இதன்றோ இன்றய நாகரீக சமுதாய தேவை....

No comments:

Post a Comment